35 ஆவது வருட ஷுஹதாக்கள் தினமும் நீதியைக் கோரும் பாதிக்கப்பட்ட மக்களும்

Wait 5 sec.

1990 ஆம் ஆண்டு இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாறு இரத்­தத்தால் எழு­தப்­பட்ட ஆண்­டாகும். கிழக்கு மாகாண முஸ்­லிம்கள் புலி­க­ளினால் படு­கொலை செய்­யப்­பட்­டதும் வட மாகாண முஸ்­லிம்கள் புலி­களால் வெளி­யேற்­றப்­பட்­டதும் இந்த ஆண்­டில்தான்.புலி­களின் ஆயுதப் போராட்­டம் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் தோற்கடிக்கப்­படும் வரையும் விடு­தலைப் புலிகள் இயக்கம் முஸ்லிம் புத்­தி­ஜீ­வி­களை, அர­சியல்வாதி­களை, படு­கொலை செய்தல், கப்பம் அற­விடல், கடத்தல் உட்­பட முஸ்லிம் சமூ­கத்தின் வியா­பாரம், விவ­சாயம் மீது பல்­வேறு கட்­டுப்­பா­டு­களை விதித்தல் என்று தொடங்கி முஸ்லிம் இனச் சுத்­தி­க­ரிப்­புக்கு வழி­ச­மைக்கும் கூட்டுப் படு­கொ­லை­க­ளையும் அரங்­கேற்­றி­யது.