உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளை வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுப்பதற்கு அரசாங்கமே தடையை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும். அரசாங்கம் எவ்வாறான தடையை ஏற்படுத்தினாலும் பிரதிப் பாதுகாப்பு அமைச்சருக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விடயத்தை கைவிடப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.