தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களிலும் புதுச்சேரியிலும் சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், மேற்கு வங்க ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.