உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யாரென கண்டறியப்பட்டுள்ளார்

Wait 5 sec.

உயிர்த்த ஞாயிறு தின பயங்­க­ர­வாத தாக்­கு­தல்களின் பின்னணியில் உள்ள பிர­தான சூத்­தி­ரதாரியை அடை­யாளம் கண்டுள்­ள­தாக பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் ரவி சென­வி­ரத்ன பாரா­ளு­மன்ற உயர்­கு­ழு­வுக்கு தெரி­வித்­துள்ளார். பாரா­ளு­மன்ற கட்­டடத் தொகு­தியில் நேற்­றைய தினம் அரச உயர் பத­விகள் தொடர்­பி­லான உயர் மட்டக் குழுக் கூட்டம் பிர­தமர் ஹரினி அம­ர­சூ­ரிய தலை­மையில் இடம்­பெற்­றது. இதன்­போது, பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சின் செய­லா­ளரின் பத­வியை தொடர்­வது குறித்து ஆரா­யப்­பட்­டுள்­ளது. இந்த கூட்­டத்­தின்­போதே பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.