தற்காப்பு நோக்கில்இந்தியாவுக்கு தெற்கே இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக் - பிரிட்டிஷ் கூட்டு ராணுவத் தளமான டியாகோ கார்சியாவை நோக்கி இரான் இரண்டு ஏவுகணைகளை ஏவியுள்ளது. இலக்கை எட்டாமல் அது தோல்வியடைந்தாலும் இரான் போர் இந்திய எல்லையை எட்டிவிட்டதா? அது இந்தியாவிற்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? என்பன போன்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.