தமிழகத்தில் தெருநாய்களால் கொல்லப்படும் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக அரசின் தரவுகள் காட்டுகின்றன. இதனால் கொந்தளிப்பில் இருக்கும் கால்நடை விவசாயிகள் அரசு இந்தப் பிரச்னையில் போதிய அக்கறை காட்டுவதில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.